maithripala sirisena 1568543485
செய்திகள்அரசியல்இலங்கை

நல்லாட்சியில் தனிமைப்படுத்தப்பட்டேன்!! – புலம்புகிறார் மைத்திரி

Share

” நல்லாட்சியின்போது நான் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது கட்சி அமைச்சர்கள்கூட ரணிலுடன் உறவாடினர்.” – என்று கவலை வெளியிட்டுள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இதரக்கட்சிகள் இணைந்து நல்லாட்சியைக் குழப்பின. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 அமைச்சர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் ரணிலுடன் உறவு வைத்திருந்தனர்.

இதனால் எனக்கென அமைச்சரவையொன்று இருக்கவில்லை, நாடாளுமன்றம் இருக்கவில்லை. எதிரணிகூட ஆளுந்தரப்புக்கு சார்பாகவே செயற்பட்டது.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி காணாமல்போய்விட்டது. மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் – அவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்காமல் முன்னோக்கி செல்ல முடியாது.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...