Vijitha Herath
செய்திகள்அரசியல்இலங்கை

பணத்தை அச்சிட்டு வழங்குவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை! – விஜித ஹேரத்

Share

” பணத்தை அச்சிட்டு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன்மூலம் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. அது பொருளாதார நெருக்கடியை மேலும் வலுப்படுத்தும்.” – என ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

” நாட்டில் தற்போது பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பச்சை மிளகாயின்விலைகூட ஆயிரம் ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் 5 ஆயிரம் ரூபாவை வைத்து என்ன செய்வது? காசு இருந்தாலும் சமையல் எரிவாயு வாங்க முடியுமா?

டிசம்பர் 29 ஆம் திகதி இந்த அரசு பணம் அச்சிட்டது. அதனைதான் பகிர்ந்துவருகின்றது. மக்களுக்கு வருமானம் இல்லை, நாட்டில் உற்பத்தி இல்லை. இவற்றுக்கு உரிய தீர்வை தேடாமல் பணத்தை அச்சிட்டு வழங்குவதில் பயனில்லை.” – என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

” அதேவேளை, பணத்தை அச்சிட்டே அதனை நாட்டு மக்களுக்கு அரசு வழங்குகின்றது. அரசியல் தீர்மானம் பொருளாதாரத்துக்கு தீர்வு அல்ல. ” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...