ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

தெற்கு அரசியலில் பரபரப்பு: ஆளுங்கட்சிலிருந்து வெளியேறத் தயாராகும் 40 பேர்!!!

Share

ஆளுங்கட்சியிலுள்ள மூத்த அரசியல்வாதிகள் சிலர், அரசின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சாதகமான பல வழிமுறைகள் இருந்தும், மீண்டும் – மீண்டும் நெருக்கடிக்குள் சிக்கும் விதத்தில் அரச மேல் மட்டம் முடிவுகளை எடுப்பதாலும், சில உறுப்பினர்கள் பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிட்டுவருவதாலும், மேலும் சில காரணங்களாலுமே அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என அறியமுடிகின்றது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சந்திர வீரக்கொடி ஆகியோர் தற்போது  அரசை வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றனர்.

மேலும் சில இன்னும் வெளிப்படையாக விமர்சனக் கணைகளைத் தொடுக்காவிட்டாலும், தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

பங்காளிக்கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், மொட்டு கட்சியிலுள்ள மூத்த உறுப்பினர்களும் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளமை தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஆளுங்கட்சிலிருந்து 40 பேர் வெளியேறத் தயாராகிவருகின்றனர் என்ற தகவலை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக இவர்கள் அரசிலிருந்து வெளியேறாவிட்டாலும்கூட தக்க தருணம்வரும்போது அதிரடியான நகர்வுகளை கையாளக்கூடும் எனவும் தெரியவருகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...