1 4
இலங்கைசெய்திகள்

மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

Share

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கும் தொடரப்பட உள்ளதாக சட்டத்துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பில், ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னதாக வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கரம் போர்ட் விநியோகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களில் சூழ்ச்சி செய்ததாக மஹிந்தானந்த மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட உள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட உள்ளனர்.

கரம் போர்ட் விவகாரத்தில், மஹிந்தனாந்த அலுத்கமகேவிற்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...