25 68446204dac79
இலங்கைசெய்திகள்

மாடுகள், பன்றிகள் கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினருக்கும் உள்ளடக்கப்படுவர்

Share

மாடுகள் மற்றும் பன்றிகள் தொடர்பான கணக்கெடுப்பின் போது எதிர்க்கட்சியினரும் உள்ளடக்கப்பட்டு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் விலங்ககள் குறித்த கணக்கெடுப்பினை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றிகள் மற்றும் மாடுகள் வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தை விமர்சனம் செய்ய ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார் பின்னர் அதனை பொய் என்று குறிப்பிட மற்றுமொரு ஊடக சந்திப்பினை நடத்தியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் குரங்குகள், மர அணில்கள் போன்றன தொடர்பில் கேள்வி எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பன்றிகள் மற்றும் மாடுகள் குறித்த கணக்கெடுப்பின் போது விலங்குகள் கணக்கெடுப்பு குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் மாபலகம தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...