gotta
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக் கட்சிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டன. எனினும், ஜனாதிபதி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கொதிப்படைந்த பங்காளிக்கட்சிகள், ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் மக்கள் சந்திப்பை நாளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. இந்நிலையிலேயே பங்காளிகளை இன்று ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.

இச் சந்திப்பையடுத்து மக்கள் சபைக்கூட்டத்தை பங்காளிகள் கைவிடக்கூடும் என தெரியவருகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...