gunshot
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் துப்பாக்கிச் சூடு

Share

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்கா மாகாணத்தில் சமீபகலமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுவருகின்றன.

பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுத் தாக்குதல்கள் போன்ற இடம்பெறுகின்றன.

கைபர் பக்துங்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி அமைந்துள்ள லாக்கி மராவத் நகரில் நேற்று காலை பொலிஸ் அதிகாரிகள் சிலர் வழமையான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

பொலிஸார் சுதாரிப்பதற்குள், பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

பயங்கரவாதிகள் சுட்டதில் பொலிஸ் அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....