Milk 750x375 1
செய்திகள்இலங்கை

200 ரூபாவால் அதிகரிக்கிறது பால்மா விலை!!!

Share

ஒரு கிலோ பால்மா விலையை 200 ரூபாவால் அதிகரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை வாழ்க்கைச் செலவுக் குழு வழங்கியுள்ளது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இவ் விலை அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை நிலவி வரும் காரணத்தால் பால்மா இறக்குமதியாளர்கள் பல்வேறுபட்ட இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு கிலோ பால்மாவின் விலையை 350 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திற்கு முன்மொழியப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு இணங்க ஒரு கிலோ பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டின் நெருக்கடி நிலையையை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்க சாத்தியம் உண்டு – என லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...

Prison Clash All Suspects Identified
இலங்கை

மோதலில் ஈடுபட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் – மேலதிக நடவடிக்கைகளுக்கு தயாராகும் சிறை அதிகாரிகள்.

  நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்களுடன்...

Disappearance
இலங்கை

விடுதலை புலிகளின் பெயரில் கடத்தல் மற்றும் கப்பம் பெறல் – கொழும்பில் நடந்த சம்பவங்கள்.

முன்னாள் அரசாங்கத்தின் பாதுகாப்பு தரப்பினர், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பலர் கடத்தப்பட்ட சம்பவத்தின்...

Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

  ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு,...