Retirement
இலங்கை

ஓய்வு வயது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்!

Share

 

ஓய்வுபெறும் வயதில் மாற்றம் செய்வது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருவதோடு, அவற்றினை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பரிசீலனைகளின் பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மீரிகம வைத்தியசாலையின் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சை பிரிவின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர், அமைச்சர் ஊடகங்களிடம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றிலிருந்து மட்டுமல்லாமல், சுகாதார சேவையில் உள்ள சில தொழில் வல்லுநர்களிடமிருந்தும், சிறைத்துறையிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன.

ஏனைய தொழில் வல்லுநர்கள் தங்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக நீண்ட காலம் பணியாற்றலாம் என்ற கருத்தும் எழுந்துள்ள பின்னணியில், சில தரப்பினர் இதனை எதிர்க்கலாம். இருப்பினும், அரசாங்கம் என்ற முறையில், தாம் அந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...