Crocodile
ஏனையவைஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீன்பிடிக்கப்போய் முதலைக்கு இரையான மீனவர்!

Share

மீனவர் ஒருவரை முதலை இழுத்துச் சென்று கடித்ததையடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவிலில் உள்ள ஆற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரே இவ்வாறு முதலையிடம் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சாகாமம் தாலிபோட்டாற்றில் வழமைபோல நேற்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் இருந்த முதலை குறித்த மீனவரைப் பிடித்து இழுத்துச் சென்று கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மண்டானை திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இராசநாயகம் விநாயகமூர்தி ( 55 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...