இலங்கைஏனையவைசெய்திகள்

முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்

Share

முல்லைத்தீவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வெடிபொருட்கள்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் இன்று(10.07.2023) மீட்க்கப்பட்டுள்ளன.

இதன்போது பெரிய பரா-13, சின்ன பரா – 01, 82MM, மோட்டார் – 49, 60MM, மோட்டார் – 01, ஆர் வி ஜி – 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பல தொகை வெடிபொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் பெருமளவில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியதாக அறியமுடிகின்றது.

மேலும் கடந்த வியாழக்கிழமை(06.07.2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணப்பட்ட மனித புதைகுழியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவrத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dengue original
இலங்கை

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு தாக்கம் – உயர்வடையும் உயிரிழப்புகள்.

இலங்கையில் இந்த வருடம் இது வரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,839 ஆக...

Boossa Prison 1
இலங்கை

பாரிய கற்களை கொண்டு அதிகாரிகள் மீது தாக்குதல் – பூஸா சிறையில் கைதி மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்....

001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...