0a1c1610 6d1e73b1 yuhadanavi
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – ஜே.வி.பி

Share

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதுவும் தெரியாது. முறைகேடான முறையிலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த உடன்படிக்கை எமது நாட்டுக்கு பாதகமானது. எனவே, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு இரத்து செய்ய முடியுமா என சிலர் கேட்கலாம். முடியும் என்பதே பதில். ஏனெனில் மக்களின் அனுமதியின்றி எதனையும் செய்ய முடியாது.

எனவே, அரசு மீளப் பெறவேண்டும். மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டும். சிலவேளை மேற்படி திட்டத்துக்காக அரசு கப்பம் பெற்றிருக்கக்கூடும். அதனால்தான் பின்வாங்க தயங்குகின்றனர்.”- என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...