9 17 scaled
உலகம்செய்திகள்

நைஜரில் இருந்து 1500 பிரெஞ்சு துருப்புகள் வெளியேற்றப்படுவர் –  ஜனாதிபதி அறிவிப்பு

Share

நைஜரில் இருந்து 1500 பிரெஞ்சு துருப்புகள் வெளியேற்றப்படுவர் –  ஜனாதிபதி அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடான நைஜரில் இருந்து 1,500 துருப்புகள் வெளியேற்றப்படுவர் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்ஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் மூன்று நாடுகளில் 4,000 துருப்புகளை நிலை நிறுத்தியுள்ளது.

நைஜர் நாட்டிலும் பிரான்சின் துருப்புகள் உள்ளனர். அந்நாட்டின் ஜனாதிபதி முகமது பசௌம் ஆட்சி அகற்றப்பட்டது இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது.

எனினும், பிரான்ஸ் தனது 1,500 வீரர்களை நிலை நிறுத்தி இருந்தது. ஆனால் மாலியில் ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு எதிர்ப்பு அறிகுறிகள் தொடர்ந்து அசைக்கப்பட்டன.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நைஜரில் இருந்து தங்கள் நாட்டின் தூதர், பல இராஜதந்திரிகள் மற்றும் 1,500 துருப்புகள் வெளியேறுவார்கள் என அறிவித்துள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிந்தைய அதிகாரிகள் இனி பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராட விரும்பவில்லை எனக் கூறிய மேக்ரான், வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் துருப்புகள் திரும்பப் பெறப்படும் என தெரிவித்தார்.

பாரிஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையப் பகுதியான நைஜரில் இருந்து வெளியேறுவது, சஹேல் பிராந்தியத்தில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுவிழக்கக்கூடிய கடுமையான அடியாகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, பிரெஞ்சு விமானங்கள் நைஜரின் வான்வெளியில் பறக்க இராணுவ ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளதாக ஆப்பிரிக்கா மற்றும் மடகாஸ்கரில் உள்ள விமான ஊடுருவல் பாதுகாப்பு ஏஜென்சி கடந்த சனிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...