உலகம்செய்திகள்

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 14 வயது மாணவியை கொன்ற காதலன்!

Share

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 14 வயது மாணவியை கொன்ற காதலன்!

தமிழக மாவட்டம் திருவண்ணாமலையில் 10ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ரேணுகா (14). இவர் கடந்த 23ஆம் திகதி பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் மாணவியின் தந்தை மாரி பொலிஸில் புகார் அளித்தார். உடனே பொலிஸார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், ரேணுகா கடைசியாக யோகேஸ்வரனிடம் (21) பேசியதாக தெரிய வந்தது.

இதனையடுத்து யோகேஸ்வரனைப் பிடித்து விசாரித்தபோது ரேணுகாவை அவர் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

அவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தனிமையில் சந்தித்து பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது யோகேஸ்வரன் ஆத்திரத்தில் ரேணுகாவை துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, அவரின் உடலை முட்புதரில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளார்.

அதன் பின்னர் ரேணுகாவின் உடலை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் யோகேஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...