8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

Share

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிஜு மேனன், விக்ராந்த், வித்யுத், சபீர் என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வெளிவரும் அதே நாளில் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படமும் வெளிவரவுள்ளது. இப்படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் தயாராகியுள்ள இப்படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் துல்கரின் காந்தா ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளிவரவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...