உலகம்செய்திகள்

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்

Share

நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் பிரான்ஸ் தலைநகரம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுவருகிறார்கள்.

வெளியேற்றப்பட்டு வருவோர் பெரும்பாலும் ஆண்கள். வீடில்லாமல், சாலையோரமாக, பாலங்களின் கீழ் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர், பாரீஸிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிரான்சில் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அவ்வகையில், வாரம் ஒன்றிற்கு 50 முதல் 150 பேர் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள், பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதன் பின்னணியில் 2024 கோடையில், பாரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட இருப்பது காரணமா என்றால், அரசு அதிகாரிகள் அதை மறுக்கிறார்கள்.

ஆனால், அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களும் இப்படி திடீரென புலம்பெயர்ந்தோர், அகதிகள் முதலானோர் பாரீஸிலிருந்து வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளும் ஒரு காரணம் என நம்புகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...