24 663d0a2390c3e
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்! சகோதரர்கள் இருவர் கைது

Share

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்! சகோதரர்கள் இருவர் கைது

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் சக நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரியானா மாநிலம் கக்சினா கிராமத்தைச் சேர்ந்த நவஜீத் சந்து (22) அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்தார்.

அவருடன் சில மாணவர்கள் மெல்போர்ன் நகரில் தங்கி படித்து வந்துள்ளனர். நவ்ஜீத்தின் நண்பர்களான அபிஜித் (26) மற்றும் ராபின் கார்டன் (27) இருவரும் அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சகோதரர்களான அபிஜித், ராபின் தனது நண்பரான நவ்ஜீத்தை கடந்த 5ஆம் திகதி கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த விழுந்த நவ்ஜீத் அங்கேயே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, நவ்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய சகோதரர்களை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர்.

 

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...