1 19 1 scaled
உலகம்செய்திகள்

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

Share

கனடாவிற்கு பயங்கரவாதத்தில் ஈடுபட..ஸ்பான்சர் விசா மூலம் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள்?

காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து, கனடாவுக்கு பயங்கரவாதத்தில் ஈடுபட அழைத்துச் செல்வதாக இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் ஆதரவுப் படையை உருவாக்க பயங்கரவாதிகள் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்கள் குறிவைக்கப்படுவதாக கூறுகிறது இந்திய உளவுத்துறை.

கனடாவுக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களுக்காக ஸ்பான்சர் விசாக்கள் தயார் செய்யப்பட்டு, குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விடுகிறார்கள்.

மேலும், கனடாவில் சட்டவிரோதமாக குடியேறிய மற்றும் அங்கு படிப்பை முடித்து சரியான வேலை கிடைக்காமல் அங்கு தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் எளிதில் இவர்களின் வலைக்குள் விழுந்து விடுகிறார்கள் என்றும் இந்திய உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

கனடாவைச் சேர்ந்த சில ஏஜென்சிகள் இந்த மனித கடத்தல் வேலையை செய்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகளில் காலிஸ்தான் ஆதவு சக்திகள் ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை கூறுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...