133242527 gettyimages 2149720428
உலகம்செய்திகள்

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

Share

பிரித்தானியா வேண்டாம்… மீண்டும் பிரான்சுக்கே திரும்பிய புலம்பெயர்ந்தோர்

உயிரைப் பணயம் வைத்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோர் ஒருவர், தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடுவதற்காக கடத்தல்காரர் ஒருவருக்கு பணம் கொடுத்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சிலர், சமீபத்தில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையமுயலும் புலம்பெயர்ந்தோரைக் காணச்சென்றிருக்கிறார்கள். அப்போது, அங்கு, பிரித்தானியாவிலிருந்து மீண்டும் பிரான்சுக்கே திரும்பிவிட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவரை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.

அவரது பெயர் ஓமர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், கடத்தல்காரர்களுக்கு 12,000 பவுண்டுகள் படகு ஒன்றின் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார் குர்திஸ்தான் நாட்டவரான ஓமர். 20 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்த நிலையில், மீண்டும் ஒரு கடத்தல்காரருக்கு 500 பவுண்டுகள் கொடுத்து, எப்படியாவது தன்னை மீண்டும் பிரான்சுக்கே கொண்டு விட்டுவிடும்படி கையைக் காலைப் பிடித்து படகொன்றில் ஏறி மீண்டும் பிரான்சுக்கே வந்துவிட்டார் அவர்.

பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, இதைவிட பிரான்சே பரவாயில்லை என பிரான்சுக்கே திரும்பிவிட்டார் அவர்.

பிரான்சில் வாழ்க்கை கஷ்டம்தான். ஆனால், பிரித்தானியாவில் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கைரேகையைப் பதிவு செய்யவேண்டும், கையெழுத்திடவேண்டும், இவ்வளவும் ஒழுங்காக செய்துவிட்டு, ஒருநாள் உங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றார்கள் பிரித்தானிய அதிகாரிகள்.

அவர்கள் இனி என்னைக் கைது செய்து ருவாண்டாவுக்கோ அல்லது ஈராக்குக்கோ அனுப்பக்கூடும். என்னால் அங்கெல்லாம் போகமுடியாது, ஆகவே பிரான்சுக்கே வந்துவிட்டேன் என்கிறார் ஓமர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...