rtjy 179 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

Share

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு வடகொரிய அதிபர் சென்றமை தொடர்பிலும் ரஷ்யாவிற்கு வடகொரியா எவ்வாறு ஆயுதங்களை வழங்கவுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவிற்கு கூடுதல் ஆயுதங்கள், உணவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பான வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...