ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது
உலகம்செய்திகள்

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

Share

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக கூறி ஜேர்மானியர் கைது

ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக அரசு அலுவலரான ஜேர்மானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணுவ தளவாடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அலுவலகம் ஒன்றின் பணியாற்றிவந்த அந்த நபருடைய பெயர் தாமஸ் (Thomas H) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்லினிலுள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் Bonn நகரிலுள்ள ரஷ்ய துணை தூதரகம் ஆகிய இடங்களுக்கு தானே சென்ற தாமஸ், முக்கிய தகவல்கள் சிலவற்றை கையளித்துள்ளார்.
கைது, சோதனை, நீதிமன்றத்தில் ஆஜர்
மேற்கு ஜேர்மனியிலுள்ள Koblenz என்னுமிடத்தில் வைத்து தாமஸ் கைது செய்யப்பட்ட நிலையில், பொலிசார் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டார்கள்.
நேற்று நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்ட தாமஸ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை துவங்க உள்ளது.
இப்படி ரஷ்யாவுக்காக உளவு பார்த்த முதல் ஜேர்மானியர் தாமஸ் அல்ல. ஏற்கனவே, ஜனவரி மாதம் ஆர்தர் E என்னும் ஜேர்மானியர் ரஷ்யாவுக்கு உளவுத்துறை தகவல்களைக் கையளித்ததாக கைது செய்யப்பட்டார்.
அதற்கு முன், ஜேர்மன் உளவுத்துறையில் பணியாற்றிய ஒருவர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்ததாக டிசம்பரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிருப்பதாக கருதப்பட்ட ஆர்தர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...