MYANMAR
உலகம்செய்திகள்

மியான்மரில் மோதல் – 20 பேர் பலி!

Share

மியான்மர் இராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மரில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரியும் சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர்.

அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்களும் தோன்றியுள்ளன. இந்தக் குழுக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் இடம்பெறுகின்றன.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஆயிரத்து 58 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே திடீரென நேற்று துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 32
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை: 14 அம்ச உடன்படிக்கை குறித்து ஈரான் பரிசீலனை

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்...

world 31
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் இழுபறி: ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

விஜய்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின்...

world 30
செய்திகள்அரசியல்இலங்கை

தந்தை செல்வா முதல் ஜோசப் விஜய் வரை: மொழி அடையாள அரசியலை முன்வைத்து ரவூப் ஹக்கீம் உரை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ள...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

“எங்களைச் சிறையிலடைக்கப் பட்டியல் தயார்”: பாராளுமன்றத்தில் சாமர சம்பத் ஆவேச உரை

பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ‘மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை’ தொடர்பான சட்டமூல விவாதத்தில்...