WhatsApp Image 2021 09 12 at 09.28.19 1
இலங்கைசெய்திகள்

வண்ணமயமாகியது களனி பாலம் !!

Share

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வரும் புதிய களனி பாலத்தில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், அவைநேற்று இரவு ஒளிரவிடப்பட்டுள்ளன.

நாட்டில் தாமரைக்கோபுரத்துக்கு அடுத்ததாக அழகான கட்டமைப்பைக் கொண்ட கட்டுமானமாக இப் பாலம் மிளிர்கிறது,

நாட்டில் முதன்முதலில் உயர் தொழில்நுட்ப கேபிள்கள் பயன்படுத்தி நிர்மாணிக்கப்படும் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தின் இரு பகுதிகளையும் அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தற்போது தேசிய தாவரவியல் பூங்கா அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், நீலோற்பலம், வாகை, மே மார, ரொபரோசியா, கஹ மார, செவ்வரத்தை, இலுப்பை மரம், நாகமரம்,அலரி, மகுல் கரட, ஆல மரம் மற்றும் முருத்த ஆகிய மரங்களை வீதியின் இருபுறமும் நடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் களனி திஸ்ஸ சுற்றுவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகள் ;மற்றும் புதிய களனி பாலத்தின் முடிவில் இருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான வீதியின் இருபக்கங்கள் ஆகிய பகுதிகள் அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தண்ணீர் வழங்குவதற்காக நிலத்தடி தானியங்கி நீர் குழாய் கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

k k1 k2 k3k4 k6

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெலிக்கடை சிறைக்கைதி மரணம்: மூன்று சிறைக்காவலர்கள் கைது; நீதிமன்றில் ஆஜர்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 40 வயதுடைய கைதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக,...

world 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாலத்தீவு – இலங்கை இடையிலான வரலாற்றுப் பிணைப்பு: ஜனாதிபதி மாளிகையில் டாக்டர் முகமது முய்ஸு உரை

மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு மற்றும் முதற்பெண்மணி சஜிதா முகமது ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

world 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகள்: 37 சீன நாட்டவர்கள் அதிரடியாக நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதற்காகவும், பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் பாதுகாப்புப் படையினரால்...

world 19
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – இந்தியா இடையே தரைவழி இணைப்பு: தயக்கங்களை கைவிட வேண்டிய தருணம் என இந்திய உயர் ஆணையர் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழிப் பாலத்தை அமைக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கையிலுள்ள இந்திய உயர் ஆணையர்...