24 66646536d5497
இந்தியாஉலகம்செய்திகள்

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்

Share

அம்பானி குடும்பத்தின் புதிய முயற்சி: 1 மில்லியன் மரங்கள்

இந்தியாவின் தொழில் துறையில் முன்னிலையில் இருக்கும் அம்பானி குடும்பம், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு பாதுகாப்பு திட்டமான “வந்தாரா”வில்(Vantara) பிரபல நடிகர்கள் அஜய் தேவ்கன், பூமி படேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற வீடியோ பிரச்சாரத்தை தொடங்கியது.

நான்வந்தாரியன் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ, நம் பூமியைக் காப்பாற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

மறுபயன்பாடு செய்யக்கூடிய குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துதல், மரங்களை நடுதல், குறுகிய தூர பயணங்களுக்கு சைக்கிளை தேர்ந்தெடுப்பது போன்ற எளிய பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என இந்த வீடியோ மூலம் பிரபலங்கள் மக்களை ஊக்குவிக்கின்றனர்.

வீடியோ பிரச்சாரம் மட்டுமின்றி, ஜாம்நகரில் உள்ள தங்கள் தலைமையகத்தில் 5000 மரங்களை வந்தாரா அமைப்பு நட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் 10 லட்சம் மரங்களை நடும் என்ற உறுதிப்பாட்டையும் வந்தாரா அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...

friends drinking
இந்தியா

தமிழ் நாட்டில் மது அருந்தும் பெண்கள் இத்தனை பேரா?

  இந்திய மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மது உள்ளதுடன், மதுபானங்களுக்கு ஜிஎஸ்டி இல்லை...

Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...