24 6665521bf0db4
இலங்கைசெய்திகள்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

அந்த அனுமதி பல கட்டங்களின் கீழ் வழங்கப்படும், அதன்படி ஒக்டோபர் மாதம் முதல் தொழிற்சாலைகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான இறக்குமதி தொடங்கப்படும். பின்னர், இரண்டாம் கட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

மூன்றாவது கட்டமாக, குறிப்பிட்ட வரம்பில் சிறிய கார்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், நான்காம் கட்டமாக, அதாவது 2025ம் ஆண்டில் சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை புத்தம் புதிய வாகனங்கள் அல்லது இரண்டு வருடங்கள் பழமையான வாகனங்களே இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...