சீனாவில் 99 அடி உயர புத்தர் சிலையை அதிகாரிகள் இடித்துத் தள்ளியுள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியான டிராகோவில் உள்ள புத்தர் சிலையே இவ்வாறு இடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இச்சம்பவமானது சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த சிலையான உயரமாக கட்டப்பட்டதாகவும் முறைப்பாடுகள் எழுந்தது என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும, புத்தர் சிலை தகர்க்கப்பட்டதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்துள்ளதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் சீன அதிகாரிகள் தோசம் காட்செல் மடாலயத்தில் உள்ள துறவிகளையும், சுவார் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் திபெத்தியர்களையும் சிலை இடிக்கப்படுவதைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
#WorldNews
Leave a comment