kodikamam
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

Share

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான நவர்ணன் எனும் இளைஞன் கடந்த 14ம் திகதி இரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகமுள்ளது என அவரது பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதவான் யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியினூடாக மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மரண விசாரணைகளில் குறித்த இளைஞன் விபத்தின்போது இதயம் வெடித்தே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...