kodikamam
செய்திகள்இலங்கை

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

Share

கொடிகாமம் விபத்து கொலையா? – பொலிஸில் முறைப்பாடு!

அண்மையில் யாழ். கொடிகாமம் – காரைக்காட்டு வீதியில் விபத்தில் இறந்ததாக கூறப்படும் இளைஞன் வீதி விபத்தில் இறக்கவில்லை. அது திட்டமிட்ட கொலை என்று இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் இந்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான நவர்ணன் எனும் இளைஞன் கடந்த 14ம் திகதி இரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகமுள்ளது என அவரது பெற்றோர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சோி நீதிமன்ற நீதவான் யாழ்ப்பாணம் மரண விசாரணை அதிகாரியினூடாக மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

மரண விசாரணைகளில் குறித்த இளைஞன் விபத்தின்போது இதயம் வெடித்தே உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...