ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னை சிறையில் அடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், ஒருவேளை அப்படி நடந்தாலும் கூட கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எந்தவித பாதிப்புக்களும் இல்லாமல் முன்னெடுத்துச்செல்வதற்கான அனைத்து திட்டங்களும் முன்கூட்டியே வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குக் கட்சி கிராம அளவிலும் மாவட்ட அளவிலும் பலமாக அமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.