Gamini
செய்திகள்இலங்கை

எம்மிடம் பொருளாதார பலம் இல்லை! – நியாயப்படுத்திய அமைச்சர்

Share

“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே.

மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது விலை உயர்வு சம்பந்தமாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்.

“பால்மா, சமையல் எரிவாயு உட்பட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறு காரணம் அல்ல. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. அதுவே காரணம்.

உலக சந்தையில் விலை அதிகரித்தாலும், எரிபொருள் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு ஆகியவை அதே விலைக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

கொரோனா நிலைமையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார சக்தி அரசாங்கத்திடம் இல்லை. அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் வழங்கினால் அது பெரும் தாக்கமாக அமையும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...