10a4fce8 anura
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம் – அநுரகுமார திஸாநாயக்க

Share

இந்த ஆட்சியை விரட்டியடித்து புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஜனநாயக வழியில் மக்கள் வீதிக்கு இறங்கினால் அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்கு நாம் தயார்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசியமானதொரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான கால கட்டத்தில் நாம் உள்ளோம். எனவே, மக்கள் புரட்சிக்கும், புதிய ஆட்சிக்கும் தலையேற்க தயாராகவே இருக்கின்றோம் எனவும் அநுரகுமார கூறியுள்ளார்.

” நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கு ஆட்சியாளர்களே காரணம். அவர்களின் தவறான கொள்கைகளாலேயே நாடு கடன் பொறிக்குள் சிக்கியுள்ளது. இந்நிலைமைக்கு கடந்த அரசும் பொறுப்புக்கூறவேண்டும்.

புரட்சிமூலமே இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும். அது ஜனநாயக வழியிலான அரசியல் புரட்சியாக அமைய வேண்டும். இதற்கு அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பு வேண்டும்.” – என்றார்.

#Srilankanews

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...