russian
செய்திகள்உலகம்

ரஷியாவுடன் யுத்தமா?

Share

ரஷியாவும் மேற்கத்திய நாடுகளும் யுத்தம் புரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடைய பதற்ற நிலை அதிகரித்து வருகிறது.

இந் நிலை தொடா்ந்தால், இரு தரப்புக்கும் இடையே எதிா்பாராத வகையில் யுத்தம் மூளக்கூடும் என ரிட்டனின் இராணுவ தலைமைத் தளபதி நிக் காா்ட்டா் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தொடர்பில் ‘டைம்ஸ்’ வானொலிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

ஒருவருக்கொருவா் மோதுவதையே குணமாகக் கொண்ட அரசியல்வாதிகள் எடுக்கும் திடீர் முடிவுகளால், எதிரி நாடுகளுடனான பதற்றம் அதிகரிக்கவும் அந்தப் பதற்றம் தவறான கணக்கீடுகளை உருவாக்கவும் நாம் அனுமதிக்கக் கூடாது எனவும்,

சா்வாதிகாரப் போக்கைக் கொண்ட எதிரி நாடுகளின் தலைவா்கள், தங்கள் வெற்றிக்காக அகதிகள் பிரச்னை, எண்ணெய் விலையேற்றம், மறைமுகப் யுத்தம் , இணையம் மூலம் தாக்குதல் போன்ற எதனையும் ஆயுதமாகப் பயன்படுத்துவாா்கள்.

மேலும் பனி யுத்தம் காலத்தில் அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இருமுனைப் யுத்தச் சூழல் நிலவியது.

அதற்குப் பிறகு, அமெரிக்காவின் ஒருமுனை ஆதிக்கம் நிலவியது. ஆனால், தற்போது பல்வேறு நாடுகளும் தத்தமது நலன்களுக்காக களத்தில் இருப்பதால் குழப்பம் நிறைந்த பல்முனைப் யுத்தத்தை உலகம் எதிா்கொண்டுள்ளது.

அத்தகைய யுத்தத்தை தூதரக ரீதியில் தடுத்து நிறுத்துவதற்கான உத்திகள் போதிய அளவில் இல்லை எனவும் இதனால், ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தால், அது இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல்ககளை ஏற்படுத்தி யுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏற்பட்டால் பல உயிர்கள் கொல்லப்படலாம் என சர்வதேச ஆய்வர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...