boat
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறும் தமிழக மீனவர்கள் – படகுகள் ஏலம்!

Share

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

இதன்படி

பெப்ரவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளும்
பெப்ரவரி 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும்
பெப்ரவரி 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்
பெப்ரவரி 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும்
பெப்ரவரி 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது படகுகள் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள விடயத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படும் படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...