boat
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறும் தமிழக மீனவர்கள் – படகுகள் ஏலம்!

Share

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

இதன்படி

பெப்ரவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளும்
பெப்ரவரி 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும்
பெப்ரவரி 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்
பெப்ரவரி 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும்
பெப்ரவரி 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது படகுகள் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள விடயத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படும் படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...