boat
செய்திகள்இந்தியாஇலங்கை

அத்துமீறும் தமிழக மீனவர்கள் – படகுகள் ஏலம்!

Share

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் அண்மைக்காலமாக அதிகளவில் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.

கைதாகும் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஏலமிடப்படவுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

இதன்படி

பெப்ரவரி 7 ஆம் திகதி யாழ்ப்பாணம் காரைநகரில் 65 படகுகளும்
பெப்ரவரி 8 ஆம் திகதி காங்கேசன்துறையில் 5 படகுகளும்
பெப்ரவரி 9 ஆம் திகதி கிராஞ்சியில் 24 படகுகளும்
பெப்ரவரி 10 ஆம் திகதி தலைமன்னாரில் 9 படகுகளும்
பெப்ரவரி 11 ஆம் திகதி கற்பிட்டியில் 2 படகுகளும்

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஏலம் விடப்படவுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது படகுகள் ஏலம் விட தீர்மானிக்கப்பட்டுள்ள விடயத்தை மீள் பரிசோதனை செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாவனைக்கு உகந்த நிலையில் காணப்படும் படகுகளை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...