கஞ்சா
செய்திகள்இலங்கை

கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

Share

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு படகில் கடத்தி வரப்பட்டுள்ள 41 மில்லியன் ரூபா பெறுமதியான 139 கிலோ கிராம் கஞ்சாவுடன் குறித்த இருவரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் காணப்பட்ட படகை சோதனைசெய்ய முற்பட்டுள்ளனர். இதன்போது படகில் இருந்த சந்தேக நபர்கள் கஞ்சா அடங்கிய பொதிகளை கடலில் வீசியுள்ளனர்.

எனினும் கடற்படையினர் கடலில் வீசப்பட்ட கஞ்சா போதைப்பொருள்களை மீட்டதோடு, படகில் இருந்த இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதான சந்தேகநபர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு ஆகியவையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...