modii scaled
செய்திகள்உலகம்

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியது இந்தியா!

Share

உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை  இந்தியா உருவாக்கியுள்ளது.

இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் கொடுக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கு அதற்கான வளங்களும் வசதிகளும் தம்மிடம் உள்ளன எனவும் உலகிலுள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அனைவரும் முன்வரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,

துடிப்பான ஜனநாயகத்துக்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எங்களுடைய ஜனநாயகம் அதன் பன்முகத்தன்மையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ வளர்ச்சியின் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்கின்றது.

இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும். உலகமும் மாறும் கொரோனா காலத்தில் இந்தியா பல சவால்களை சந்தித்துள்ளது. உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலால் பல இடர்களுக்கு முகம் கொடுத்துள்ளது.

உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது என்பதை நான் இந்த அவையில் பெருமையுடன் கூற விரும்புகிறேன். அத்துடன் இந்திய விஞ்ஞானிகள் கொவிட்-19 எதிராக நாசியூடாக செலுத்தும் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்து வருகின்றனர்.

இன்று பிற்போக்கு சிந்தனை மற்றும் தீவிரவாதம் உலகின் முன் அதிகரித்து வருகின்றது.

பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றனர்.

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தைத் தாக்குதலை நடத்தவோ பயங்கரவாதத்தை பரப்பவோ பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள சூழ்நிலையை எந்தவொரு நாடும் அதன் சுயநலத்துக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை எனவும் நாம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...