President Gotabaya Rajapaksa
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு!- ஜனாதிபதி உறுதி

Share

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி மேற்படி தெரிவித்துள்ளார்.

மேலும், காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்படி, கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் குறித்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆயினும் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக குறித்த சந்திப்பு தொடர்பான திகதி தீர்மானிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று இடம்பெற்ற அமைச்சருடனான சந்திப்பின்போது, காணாமல் போனோரின் உறவினர்களுடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தமது உறவுகள் காணாமல் போன நிலையில், அவர்களது உறவுகள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தேர்வுகளை முன்வைப்பதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...