aryan khan
செய்திகள்இந்தியாசினிமா

ஷாருக்கானின் மகனுக்குப் பிணை: விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இதோ!

Share

மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பொலிவுட் நடிகர் ஷாருகானின் மகன், ஆர்யன் கான் இன்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருக்கு நேற்று முன்தினம் (28) மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஏறத்தாழ 27 நாட்களுக்கு பின்னர் ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும், வெளிநாடு செல்வதெனில் நீதிமன்ற அனுமதி பெற்ற பின்னரே செல்ல வேண்டும் என்றும், விசாரணைக்கு அதிகாரிகள் எப்போது அழைத்தாலும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டினர் கைது: விசா விதிமீறல் தொடர்பாக பொலிஸார் விசாரணை

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை, கந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரதுகல பூர்வீகக் கிராமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் மடுல்ல பிரதேசத்திற்குட்பட்ட ரதுகல (Rathugala) பூர்வீகக் கிராமத்தின் தலைவரான டானிகல மகா பந்தலகே சுதா...