31.08 4 e1630403103918
செய்திகள்இலங்கை

ஆட்டுக் கொட்டகை இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி!!

Share

வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தந்தை தமது ஆடுகளை கொட்டகையில் கட்டிக்கொண்டிருந்தபோது, சிமெந்து கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்த ஆட்டுக் கொட்டகையின் சுவருக்கருகில் ஒன்றரை வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

31.08 6 711x400 1

இதன்போது ஆடு மிரண்டு கொட்டகையின் சுவர்களை இடித்தபோது, சுவர் இடிந்து ஒன்றரை வயது சிறுவனுக்கு மேல் விழுந்ததுள்ளது.

இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னரே சிறுவன் உயிரிழந்துள்ளான் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் வவுனியா, பம்பைமடுவைச் சேர்ந்த சுஜந்தன் கிருசன் என்ற ஒன்றரை வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...