147a6d45 9627 4bde 9ae3 94d9028e8041
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலை அருகில் வாள்வெட்டு! – இளைஞன் மருத்துவமனையில்

Share

இளைஞன் ஒருவன் கும்பல் ஒன்றால் துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் சன நடமாட்டம் அதிகமாக காணப்படும் யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திப்பகுதியில்
இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற்றுள்ளது.

குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் யாழ். நகர் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், குறித்த நபரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் பரமேஸ்வரா சந்தியில் வழி மறித்து மிகக் கடுமையான வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பித்து, இளைஞன் பல்கலைகழக பக்கமாக தப்பியோடிய போதும், துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்த இளைஞன், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...