April 21
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: பதிலளிக்கவுள்ள அமைச்சர்!

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாளை பதிலளிக்கவுள்ளார்.

இந்த தகவலை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில் நாளை நான் தெளிவுபடுத்தவுள்ளேன் என்று அவர் சபையில் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...