IMG 20220313 WA0031
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு! – சந்தேக நபர் கைது

Share

பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளை தொடர்ச்சியாக திருடி வந்த ஒருவர் கைது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை – சுப்பர்மடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20 துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன என சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

திருடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளில் 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனையவை தேடப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...