arrest scaled
செய்திகள்அரசியல்இலங்கை

மாணவர்கள் தாக்குதல்! – அருந்திக பெர்னாண்டோவின் மகன் கைது

Share

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் (வயது – 23) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் ராகம மருத்துவபீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார்.

அவர் தானாக முன்வந்து பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தினார் என கூறப்படும் ஜீப் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான அவர் இன்றையதினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் பலகோணங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...