sampanthan 1
செய்திகள்அரசியல்இலங்கை

சம்பந்தன் – சுமந்திரன் – அமெரிக்காவின் புதிய தூதுவர் சந்திப்பு!

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர்
ஜுலி சங் இற்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் உட்பட மேலும் சில முக்கியமான விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன. இந்த தகவலை அமெரிக்க தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பு தரப்பில், அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படுவதற்கு அமெரிக்காவின் கரிசனையும் தொடர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும் சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...