dfds
செய்திகள்இலங்கை

மண்டைக்கல்லாறில் உவர்நீர் தடுப்புச் சுவர் – மக்கள் கோரிக்கை!!

Share

கிளிநொச்சி பூநகரி ஏ -32 வீதியின் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர்நீர் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் ஒருபகுதி மற்றும் குஞ்சுக்குளம் திக்காய் போன்ற பகுதிகளில் சுமார் 650 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

குறித்த நிலங்களில் பயிர் செய்ய முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இருந்த உவர்நீர்த் தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில், கடல்நீர் மண்டைக்கல்லாறு வழியாக பரவிவருவதால் இந்த வயல் நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.

இவ்வாறாக கடல் நீர் பரம்பல் அதிகரித்து வருவதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னர் தாங்கள் பயிர்செய்து வந்த நிலங்கள் கூட தற்போது உவர் நிலங்களாக மாறி வருகின்றன. எனவே தமது விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் உவர்நீர்த் தடுப்பணைகளை அமைத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் அவர்களை தொடர்புகொண்டு வினவியபோது, ஏ – 32 வீதியின் மண்டைக்கல்லாறு பாலத்துக்கு அண்மித்த பகுதியில் உவர்நீர் தடுப்பு சுவர் ஒன்றை அமைக்கும்போது இதனை முழுமையாக தடுக்க முடியும். இது தொடர்பில் ஆய்வுகளை மேற் கொண்டு அதனை Integrated watershed & water Resources planning project (I.w.wR.M.P) என்ற திட்டத்தின் மூலம் செய்வதற்குரிய முன்மொழிவுகளை அனுப்பியுள்ளோம்.

மேற்படி திட்டத்தின் கீழ் தடுப்பு சுவர்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...