637510547761645993Basmati rice with a spoon square
செய்திகள்இலங்கை

அதிகரிக்கிறது அரிசி விலை!!!

Share

நாட்டில் அரிசி விலை அதிகரிக்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு அரிசிக்கு கட்டுப்பட்டு விலை நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசி என்பன நாடளாவிய ரீதியில் பரவலாக கைப்பற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அரிசி ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய அரிசியின் விலையில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்படி அரிசி விலை தொடர்பில் அரசால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதன்படி சம்பா அரிசி ஒரு கிலோ 103 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும், கீரி சம்பா 125 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரிசிக்கு விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதேவேளை அரிசி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...