Lohan Ratwatte
செய்திகள்இலங்கை

லொஹானுடன் அழகு ராணி சிறைக்கு சென்றமை உண்மையே!!

Share

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றார் என கூறப்படும் தகவல் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அழகு ராணி புஷ்பிகா டி சில்வா, தான் ரத்வத்தையுடன் சென்றேன் என தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை எனவும், குறித்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றமை உண்மையென கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

லொஹான் ரத்வத்தையுடன் திருமதி புஷ்பிகா டி சில்வா வெலிக்கடை சிறைச்சாலையைப் பார்க்கச் சென்றார். இதில் சந்தேகமில்லை என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவரான சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.

லொஹான் ரத்வத்தையுடன், வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற குழுவில் அழகு ராணி ஒருவரும் இருந்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, “நான் அங்கு செல்லவில்லை. அந்தக் கதைகள் பொய்யானவை” என புஷ்பிகா டி சில்வா தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தான் பெண்ணுடன் வெலிக்கடை சிறைக்கு சென்றேன் என வெளியாகும் தகவலில் உண்மையில்லை என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...

Department of Prisons
இலங்கை

மீண்டும் சிறைச்சாலைத் துறை பொறுப்பில் வந்தது பல்லன்சேன சிறைச்சாலை.

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க...

palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...

parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...