cropped 71 696x393 1rr scaled
செய்திகள்இலங்கை

உயிர்த்த ஞாயிறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.

கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு திட்டமிடல், உதவி வழங்கல் மற்றும் பலத்த காயங்களுக்கு உட்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...