niru 1 scaled
செய்திகள்இலங்கை

சர்ச்சையில் சிக்கியுள்ள நிருபமா ராஜபக்ச! – சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

Share

பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பண்டோரா வௌிப்படுத்திய நிதி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.

மேலும், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு வெளியக அழுத்தங்கள் இல்லாது, விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.

இதேவேளை, கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...