LPL 2020 scaled
செய்திகள்விளையாட்டு

LPL- வீரர்களுக்கான பதிவுகள் ஆரம்பம்!

Share

LPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடர், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகி 23 ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ளது.

இதையொட்டி இப் பதிவுகள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டு ஒக்ரோபர் மாதம் 5 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையவுள்ளன.

இத் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் தம் நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.  ஒவ்வொருவரும் தமது நாட்டின் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருக்கவேண்டும்.

அத்துடன், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவராக இருக்கவேண்டும்.  T-20 தொடருக்கான அணியில் இடம்பெற்றவராக இருக்க வேண்டும் என்பது கட்டாய தகுதியாகும்.

இந்த தொடரில் ஐந்து அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், ஒவ்வொரு அணியிலும் 20 வீரர்கள் விளையாட உள்ளளர்.

LPL அணியில் பங்கு பெறும் 20 வீரர்களில் 14 பேர் உள்ளூர் வீரர்களாகவும் 6 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருப்பார்களென்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...